Wednesday, October 14, 2009

 

ரவா தோசைஉளுந்து வடை,பருப்பு வடை செய்வது?

1. பனீர் செய்வதெப்படி?

2. மொறு மொறு ரவா தோசை எப்படிச் செய்வது?

3. பருப்பு வடை எப்படிச் செய்வது?

4. உளுந்து வடை செய்வதெப்படி?

இவை நான்கும் நன்கு ருசியுடன் எப்படிச் செய்வதென்று ரொம்ப நாளாகவே எனக்கு சந்தேகம். யாருமே இதைக் கேட்டால் சொல்லித் தருவதில்லை. தயவு செய்து சிநேகிதியில் பிரசுரித்தீர்களானால் பத்திரமாக வைத்து செய்து சாப்பிட்டு சந்தோஷப்படுவேன்.

இரண்டு லிட்டர் பசும்பாலை நன்கு காய்ச்சுங்கள். பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போதே பக்கத்து அடுப்பில் ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க விடுங்கள். பிறகு இந்த தண்ணீரில் 100மி.லி. வினிகர் ஊற்றிக் கொள்ளுங்கள். நன்கு காய்ச்சிய பாலை கீழே இறக்கி, 10 நிமிடம் கழித்து அதில் வினிகர் கலந்த கொதி நீரை ஊற்றவும். பால் திரிந்து விடும். இதை ஒரு வெள்ளைத் துணியில் ஊற்றி மூட்டையாக கட்டி, உயரே கட்டி விடுங்கள். தண்ணீரெல்லாம் வடிந்த பிறகு பார்த்தால் பனீர் ரெடியாகி இருக்கும்.

பனீர் செய்வதற்கு பசும்பால்தான் சரி... பசும்பால் கிடைக்கவில்லையென்றால் கொழுப்புச் சத்து குறைவான பாலை பயன்படுத்தலாம்.

உளுந்த வடை...

ஒரு கப் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து, அதை 3 தடவை மட்டும் அலம்பி கிரைண்டரில் குறைவாக தண்ணீர் விட்டு நெழுக அரைத்துக் கொள்ளவும். மாவை அரைத்து எடுக்கும்போதுதான் உப்பு சேர்க்க வேண்டும். இந்த மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடியது இந்த வடை ஹனீஃபா!

டிப்ஸ்: உளுத்தம் பருப்பை நிறையத் தடவை அலம்பினால், அதில் உள்ள பிசுக்குத் தன்மை போய் வடை சரியாக வராது.

ரவா தோசை

100 கிராம் ரவையை, அரைமணி நேரம் ஊற வையுங்கள். பிறகு அத்துடன் சேர்த்து 50 கிராம் அரிசி மாவு ஊற வையுங்கள். அரிசி மாவை சேர்த்த 10நிமிடம் கழித்து 50 கிராம் மைதா மாவைச் சேர்த்து ஊற வையுங்கள்.

10 நிமிடம் கழித்து இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சரியான தீயில் (தீ அதிகமாகவும் இருக்கக் கூடாது; குறைவாகவும் இருக்கக்கூடாது) தோசைகளாக வார்க்கவும். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல மொறுமொறுவென நல்ல ருசியுடன் இருக்கும்.

பருப்பு வடை...

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, அரிசி - மூன்றையும் துவரம் பருப்பு அளந்த அதே கப்பில் தலா ஐந்தில் ஒரு பாகம் மட்டும் எடுத்துக் கொண்டு ஊற வையுங்கள். இவைகளை தேவையான மிளகாய் வற்றல்களுடன் சேர்த்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உப்பு, பெருங்காயப் பொடி அல்லது நறுக்கிய வெங்காயம் சேர்த்து சின்னதாக உருட்டி மென்மையாகத்தட்டி எண்ணெயில் பொரித்தெடுங்கள்! இதை ஆமை வடை என்றும் சொல்லலாம்!

நீங்கள் சொல்லித்தந்தபடியே அடை அவியல், பால் பாயசம் இரண்டும் செய்து பார்த்தேன் சார். டேஸ்ட் சூப்பர் என்று என் கணவரும், குழந்தைகளும் பாராட்டியே என்னை திக்கு முக்காட வைத்து விட்டார்கள். எனக்கு கோயிலில் செய்வது போன்ற புளியோதரை எப்படி செய்வதென்று சொல்லி தருவீர்களா?


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]