Wednesday, October 14, 2009

 

பாலில் கலப்படம்-அதிர்ச்சி கட்டுரை

கொஞ்சம் ஒயிட் பெயிண்ட் நுரைக்கு கொஞ்சம் ஷாம்பு என்ற காம்பினேஷனில் பால் தயாரிப்பதை டி.வி.யில் காட்டினார்களாம். (வாசகிகளின் கடிதங்கள் பாக்ஸ் மேட்டரில்) விஷயத்தைப் படித்துவிட்டு, பதறிப் போய் களத்தில் இறங்கினோம். நமக்கு கிடைத்தது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. இதோ அதுபற்றி அட்வகேட் முருகன் சொல்கிறார்:

``பாலில் 3 விஷயங்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. முதல் கலப்படம் எல்லோருக்கும் தெரிந்த தண்ணீர். பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம். பாலில் இருக்கும்போது லேக்டோ மீட்டர் 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் அந்தப் பாலில் தண்ணீர் கலப்படம் நடந்திருக்கிறது. இந்த கலப்படத்தில் நமக்கு கெடுதல் ஒன்றுமில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.

அடுத்து பால் திக்காக தெரிய வேண்டுமென்பதற்காக அதில் ஒரு வகை மாவு கலக்கப்படுகிறது. இதைக் குடிக்கும் குழந்தைகளின் வயிறு என்ன கதிக்கு ஆளாகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

பாலில் மாவு கலந்திருப்பதை கண்டுபிடிக்க வேண்டுமானால், பரிசோதனைக் கூடத்தில் டிஞ்சர் அயோடின் எனப்படும் கெமிக்கலை பாலில் போட்டால் அது நீல நிறமாகிவிடும். வீட்டில் பரிசோதிக்க வேண்டுமானால், வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு துளி விட்டால் அது ஷேக் மட்டும்தான் ஆகும். ஆனால் மாவு கலந்த பாலைவிட்டால் அது தரையில் ஒட்டி நிற்காமல், உருண்டோடும்.

பாலில் கலக்கப்படும் மூன்றாவது விஷயம் என்ன தெரியுமா? நம்புங்க... சத்தியமா சோப்பு பவுடர்தான். சோப்புப் பவுடர் பாலைக் கெடுத்து விடாதா என்றுதானே யோசிக்கிறீர்கள். அப்படி பால் கெட்டுப் போகாதபடிக்கு, அதை இன்னும் சில கெமிக்கல் பிராசஸ் செய்கிறார்கள். இந்தப் பாலை கொதிக்க வைத்து ஆற்றினால் பாலில் ச்சும்மா நுரை பொங்கி வழியும். அதோட கொடுமையான சீக்ரெட் சோப்பு பவுடர்தாங்க... பாலில் நுரை அதிகமாக இருந்தால் இனி உஷாராயிடுங்க..!

பாலில் கலப்படம் செய்வதில் உச்சக்கட்ட கொடுமையான விஷயம் இதுதான்.

எல்லா மாடுகளுமே சிறிதளவு பாலை தன் கன்றுக்காக மடியிலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளும். இது இயற்கை அவைகளுக்கு சொல்லிக் கொடுத்த தாய் அன்பு. அந்தப் பாலையும் அதன் மடியிலிருந்து பிடுங்குவதற்கு மாடுகளுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும் ஆக்ஸிடோஸின் இன்ஜெக்ஷனை அதன் கழுத்தில் போட்டுவிட்டு பிறகு பால் கறக்கிறார்கள். நரம்புகள் தளர்ந்து போன அந்த மாட்டிடம் இருந்துவருவது பால் மட்டுமல்ல.. அதன் ரத்தமும் சேர்ந்துதான்! இந்தப் பாலைக் குடிப்பதால் நமக்குக் கிடைப்பது விட்டமினோ, கால்சியமோ அல்ல.. தீவிரமான வாதநோய்தான்!

சில பிராண்டட் நிறுவனங்கள் எங்கள் பாலில் 100% பாக்டீரியா கிடையாது என்று விளம்பரம் செய்கின்றன. உண்மையில் இது தவறு. பாலின் சுவையே சில `நல்ல' பாக்டீரியாக்களால்தான். வேண்டுமானால் `கெட்ட' பாக்டீரியாக்கள் முழுவதுமாக நீக்கப்பட்ட பால் என்று வேண்டுமானால் விளம்பரப்படுத்தலாம்!

பால் பாக்கெட்டின் மீது அது பேக் செய்யப்பட்ட தேதி இருக்கும். பேக் செய்யப்பட்டு 2 நாட்களுக்குள் இருந்தால் மட்டும் அந்தப் பாலை வாங்கலாம். அதற்கு மேல் என்றால் வேண்டவே வேண்டாம்!


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]