Friday, November 20, 2009

 

மரவள்ளிக் கிழங்கு அடை

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக் கிழங்குத் துருவல் - 4 கப்
  • புழுங்கரிசி - ஒரு கப்
  • பச்சரிசி - ஒரு கப்
  • மிளகாய் வற்றல் - 12
  • சோம்பு - ஒரு ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • அரிசி வகைகளை போதுமான தண்ணீரில் சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு நீரை இறுத்து மரவள்ளித் துருவல், மிளகாய் வற்றல், சோம்பு, உப்புடன் நன்கு அரைக்கவும்.
  • அரைத்த மாவினை சுமார் 4 மணி நேரம் வைத்திருந்து பிறகு அடையாக சுடவும்.
  • தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]