தேவையான பொருட்கள்- பானிக்கு:-
 - -------------
 - புதினா - 1/2 கட்டு,
 - கொத்தமல்லி தழை - 1/2 கட்டு,
 - பச்சை மிளகாய் - 2,
 - வெல்லத்தூள் - 1 தேக்கரண்டி,
 - எழுமிச்சம் பழச்சாறு - 1 பழ அளவு,
 - பேரிச்சம் பழம் - 4,
 - உப்பு - தேவையான அளவு.
 - உள்ளே நிரப்ப:-
 - ------------------
 - வேக வைத்த உருளைக்கிழங்கு - 2,
 - வேக வைத்த முளைப்பயிறு - 2 கைப்பிடி,
 - சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
 - மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
 - உப்பு - தேவையான அளவு.
 
  | 
செய்முறை- உருளைக்கிழங்கை உதிர்த்து, மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
 - பானிக்குக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக அரைத்து தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
 - பானி பூரி செய்யும் முறை:-ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரிகளில் உப்பியவற்றை எடுத்து, நடுவில் துளையிட்டு, உருளைக்கிழங்கு கலவையை உள்ளே நிரப்பி, பானியை உள்ளே ஊற்றி, உடனே சாப்பிட வேண்டும்.
 
  | 
குறிப்பு:
தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளலாம்.
			  # posted by Nagaraji.B @ 2:28 AM 
  
			 
 
  
Post a Comment