Monday, April 5, 2010

 

கோடை​யில் குளிர...



* எலு​மிச்​சம் பழத்தை வெது​வெ​துப்​பான நீரில் பிழிந்து,​​ குளு​கோஸ் மற்​றும் தேன் கலந்து குடிக்க,​​ சுவை​யும் கூடும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

* இள​சான நுங்​கு​களை,​​ தோல் நீக்கி கையி​லேயே துண்​டு​க​ளாக்கி,​​ ​(மிக்​ஸி​யில் அடித்​தால் பசை​போல் இருக்​கும்)​.​ பால் சேர்த்து ஏலக்​காய்,​​ சர்க்​கரை கலந்து பிரிட்​ஜில் வைத்​துக் குளி​ரச் செய்து பரு​க​லாம்.​

* இள​நீ​ரில் உப்பு எலு​மிச்சை சாறைக் கலந்து புதி​னாவை நறுக்கி அதில் சேர்த்து பிரிட்​ஜில் வைத்து குளிர்ந்​த​தும் குடித்​துப் பாருங்​கள்.​ குற்​றால அரு​வி​யில் குளித்​த​து​போல் இருக்​கும்.​

* கோடை​யில் நீர்​மோர் தயா​ரிக்​கும்​போது நீர்​மோ​ரில் இஞ்சி,​​ பச்சை மிள​காய்க்​குப் பதி​லாக சிறி​த​ளவு மிளகு ரசப் பொடி​யைச் சேர்த்​துப் பாருங்​கள்.​ அதன் சுவையே தனி.​

* "ஐஸ்'க்கா​கத் தண்​ணீரை ப்ரீ​ச​ரில் வைக்​கும்​போது சிட்​டிகை உப்​புத்​தூள் கலந்து வைத்​தால் ஜூ​ஸில் கலக்​கும்​பொ​ழுது அதன் இனிப்​புச் சுவை கூடு​த​லா​கத் தெரி​யும்.​ தாக​மும் அடங்​கும்.​

* கோடை​யில் நீரா​கா​ரம் சாப்​பி​டு​வது உட​லுக்கு நல்​லது.​ ஆனால் இர​வில் சாதத்​தில் நீர் ஊற்றி வைத்​தால்,​​ கோடை வெப்​பத்​திற்கு சாதம் கூழாக மாறி​வி​டும்.​ இதற்கு இர​வில் சாதத்​தில் தண்​ணீர் ஊற்​றும்​போது,​​ சிறி​த​ளவு உப்​பைக் கலந்து வைத்​தால் காலை​யில் கூழாக மாறாது.​

* புதினா,​​ ரோஜா இதழ்,​​ செம்​ப​ருத்​திப்பூ,​​ சிறி​த​ளவு பெப்​பர்​மின்ட் முத​லி​ய​வற்​றைப் பெரிய பாத்​தி​ரத்​தில் போட்டு அது நிறைய குடி​நீர் ஊற்றி கண்​ணா​டித் தட்​டால் மூடி வெயி​லில் ​ காலை பத்து முதல் மதி​யம் மூன்று வரை வைக்​க​வும்.​ பிறகு இதனை வடி​கட்டி ஆற வைத்​துக் குடித்​தால் சூடு தணி​யும்.​

* கோடை​யைச் சமா​ளித்து உடல் நலம் காக்க எலு​மிச்சை சாறு அடிக்​கடி அருந்​து​வது நல்​லது.​ எலு​மிச்​சம் பழச்​சா​றில் வைட்​ட​மின் சி நிறைந்து இருப்​ப​தால் ​ நோய் எதிர்ப்பு சக்​தி​யாக செயல்​பட்டு உட​லுக்​குள் எந்​தப் பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொண்டு தோலில் அரிப்பு,​​ தடிப்பு போன்ற பாதிப்​பு​கள் ஏற்​ப​டா​மல் தடுத்து பள​பள மேனி​யு​டன் இளமை தோன்​றத்​து​டன் காணப்​பட உத​வு​கி​றது.​

* வெள்​ள​ரிக்​காய்​க​ளைத் துண்​டு​ துண்​டாக வெட்டி ஒரு பாத்​தி​ரத்​தில் போட்டு மோர் ஊற்றி அதில் கொத்​து​மல்லி,​​ இஞ்சி,​​ வெட்​டி​வேர் மணக்​கப்​போட்டு உச்சி நேர வெயி​லில் இரண்டு டம்​ளர் பரு​கிப் பாருங்​கள்.​ உடல் "குளு​குளு'வென இருக்​கும்.​ கோடை வெப்​பத்​தால் சிறு​நீ​ர​கம் பாதிக்​கப்​ப​டா​மல் பாது​காப்​பாக இருக்க

வெள்​ள​ரிக்​கா​யி​லுள்ள பொட்​டா​சிய உப்பு உத​வு​கி​றது.​

* குடி​நீர் பானை​யில் சுத்​தம் செய்த ஆவா​ரம் பூக்​க​ளைப் போட்டு வைத்து இந்​நீ​ரைக் குடித்​தால்,​​ நாவ​றட்சி,​​ நீங்​கும்.​ கண்​க​ளுக்​குக் குளிர்ச்சி கிடைக்​கும்.​


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]