Wednesday, April 14, 2010

 

தக்காளி பர்ஃபி

தக்காளி பர்ஃபி

தேவையானவை: தக்காளி - 3, தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - இரண்டரை கப்.



செய்முறை: கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு தோலை உரித்து விட்டு ஜூஸாக்கவும்.



தேங்காய் துருவல், தக்காளி ஜூஸ், சர்க்கரை ஆகியவற்றை அடி கனமான, அகலமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைத்து கரண்டியால் கிளறவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், எசன்ஸ் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

இந்த பர்ஃபி புளிப்பு, இனிப்பு என புதுவித சுவையில் இருக்கும் .

Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]