Monday, July 19, 2010

 

இயற்கை சாம்பார்

இயற்கை சாம்பார்
தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி - தலா 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - கைப்பிடியளவு, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், தக்காளி - 200 கிராம், குடமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், முட்டைகோஸ், வெண்பூசணி - தலா 100 கிராம், கேரட் - 200 கிராம், குடமிளகாய் - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 3, இஞ்சி - சிறிய துண்டு, பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். குடமிளகாய், பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் தனியே அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடியை தேவையான அளவுத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் காய்கறி துருவல், அரைத்த தேங்காய் விழுது, சாம்பார் பொடி, அரைத்த கொத்தமல்லி, கறிவேப்பிலை விழுது, சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, பிளாக் சால்ட் போட்டு கலக்கினால் இயற்கை சாம்பார் தயார்.
குறிப்பு: இதனை அவல் சாதம், நேச்சுரல் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]