Monday, March 22, 2010

 

பொங்கலோப் பொங்கல்!

பொங்கலோப் பொங்கல்!ஜனவரி 03,2010,15:20 IST

- வசந்தா விஜயராகவன்
""தையத் தையத் தையாத் தையா .... தகத்
தையத் தையத் தையாத் தையா ...'' என்று
தாளம் போடவைக்கும் தைத்திருநாள்.
பொங்கல் தினத்தன்று ""சமையல் கலை நிபுணர்'' வசந்தா விஜயராகவன் தந்துள்ள இந்த வெரைட்டியான பொங்கல் வகைகளைச் செய்து ருசி கூட்டுங்கள். இல்லமெங்கும் இன்பம் பொங்கட்டும் !





வெண் பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - 2 கப், பாசிப்பருப்பு - அரை கப், மிளகு - ஒன்றரை டீஸ்பூன், ஒன்று இரண்டாகப் பொடித்த சீரகம், இஞ்சித் துருவல்- தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது, உப்பு, நெய் - தே�யான அளவு முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : அரிசியையும், பாசிப்பருப்பையும் நன்றாகக் கழுவி, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். உப்பு சேர்த்து கரண்டியால் மசிக்கவும். கடாயில் நெய்விட்டுக் காய்ந்ததும், முந்திரியைப் போட்டு வறுத்து, மிளகு, சீரகத்தூள், இஞ்சித் துருவல், கறிவேப்பிலைச் சேர்த்து வறுத்து மசித்த கவலையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும் !





மிளகு- சில்லிப் பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - முக்கால் கப், பாசிப் பருப்பு - கால் கப், பால் - ஒரு கப், தண்ணீர் - 2 கப், உப்பு. நெய் - தேவையான அளவு.
தாளிக்க : கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகத் தூள், - ஒரு டேபிள் ஸ்பூன் , இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, முந்திரித் துண்டுகள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை : அரிசி, பருப்பை தண்ணீர், பால் சேர்த்து வேக வைத்து, உப்பு சேர்த்து நன்றாக மசிக்கவும். நெய்யில் கடுகு தாளித், முந்திரி, மிளகு, சீரகத்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கி, மசித்துவைத்துள்ள பொங்கலில் சேர்க்கவும் !





கல்கண்டு பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - ஒரு கப், பால் - 3 கப், கல்கண்டு - அரை கப், நெய்- 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி- திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : பாலில் அரிசியைக் குழைய வேக வைத்து, அதில் கல்கண்டு சேர்த்துக் கிளறி, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். கடைசியில் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும் !





ரவா பொங்கல் !
தேவையானவை : வறுத்த ரவை - ஒரு கப், வேகவைத்த பயத்தம்பருப்பு - கால் கப், மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - இரண்டு டேபிள் ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், நெய், கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.
செய்முறை : கடாயில் நெய்விட்டு முந்திரியை வறுத்து மிளகு, சீரகத்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டுக் கொதித்ததும், வேகவைத்த பாசிப்பருப்பு, வறுத்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும் !





வெல்ல பால் பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - ஒன்றரை கப், பாசிப் பருப்பு - அரை கப், பால் - 5 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - 100 கிராம், முந்திரி, திராட்சை, 4 - டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன், குங்குமப் பூ, வறுத்துப் பொடித்த ஜாதக்காய்த் தூள் - தலா கால் டீ ஸ்பூன்.
செய்முறை : சிறிது நெய்யில் அரிசி, பாசிப் பருப்பை வறுத்து பால் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பிறகு எடுத்துக் கரண்டியால் நன்றாக மசிக்கவும். கடாயில் மீதம் உள்ள நெய்விட்டுக் காய்ந்ததும், முந்திரி, திராட்சையை வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கொதித்து விடவும். கெட்டியானதும் இறக்கி வறுத்துவைத்துள்ள முந்திரி, திராட்சை, ஜாதிக்காய்த் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து சிறிது பாலில் குங்குமப் பூவைக் கரைத்துச் சேர்க்கவும்!



 

முருங்கைக்காய் குருமா!


தேவையான பொருட்கள் :



முருங்கைக்காய் - 4, தக்காளி-3, சின்னவெங்காயம்-10, இஞ்சி சிறுதுண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய்-4, சிவப்பு மிளகாய்-2, சோம்பு-1 டீஸ்பூன், தேங்காய் - 1/2 மூடி, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப



தாளிக்க:



பட்டை -1, அன்னாசிப் பூ - சிறிது, கிராம்பு -1, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

செய்முறை :

முருங்கைக்காயைத் துண்டாக்கி, உள்ளிருக்கும், சதைப்பற்றை மட்டும் ஸ்பூனால், சீவி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவி, சிவப்பு மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாய் அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். சீவிய முருங்கைக்காய் சதைப்பற்றைச் சேர்த்து வதக்கவும். சுருண்டு வரும்போது ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு வெந்ததும், அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். குழம்பு கொதித்ததும், மல்லித் தழை சேர்த்து இறக்கவும். சுவையான முருங்கைக்காய் குருமா, தயார். சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமாய் இருக்கும்.



 

மீந்து போன உணவு பாதுகாப்பானதா?

சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அதிக நேரம் வைத்திருப்பது சரியல்ல என்பது “வர்களின் முதல் கணிப்பு. அறை வெப்ப நிலையில் பாக்டீரியt�ஞ்கக்ஞ்கள் அதிகமாக வளர்கின்றன. காலை உணவிற்குப் பின் மீந்து போன உணவை உடனே ஆறவைத்து அதாவது சமைத்து 2 மணி நேரத்திற்குள் குளிர் நிலையில் ஃப்ரீசலில் சுத்தமான மூடிய பாத்திரத்திற்குள் வைப்பது உடல் சுகாதாரத்திற்குப் பாதுகாப்பானது என்கிறார்கள். மேலும் குளிர்நிலையில் வைத்திருக்கும் உணவை அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் உபயோகப்படுத்திவிடுவது உத்தமம் என்கிறார்கள்.


குளிர்நிலையிலிருந்து ஃப்ரீசரிலிருந்து வெளியே எடுக்கும் உணவை அதிக நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருக்கக்கூடாது. ஃப்ரீசரிலிருந்து எடுத்த உணவை முழுவதுமாக கொதிக்க வைத்த பின் உண்பது நல்லது. கொதிக்கும்போது கெட்ட வாடை அடிப்பது போல் சந்தேகப்பட்டால் அந்த உணவை உண்ணக்கூடாது.


ஒவ்வொரு உணவு பதார்த்தங்களுக்கும் அதற்கான நிலைப்புத்தன்மை (ஷெல்ஃப் லைஃப்) உண்டு. அதிக புரோட்டீன் மற்றும் தண்ணீர் சேர்ந்த உணவுகள் (சாம்பார், வேகவைத்ததால், பொங்கல்) சீக்கிரம் கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம்.


சைவ உணவுகளைவிட அசைவ உணவுகள் சீக்கிரம் கெட்டுபோகின்றன. இதுவே உப்பு, வினீகர் சேர்ந்த ஊறுகாய் போன்றவற்றை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.




மீந்துபோன உணவை ஃப்ரிசரில் வைத்து அடுத்த நாள் கொதிக்க வைத்து "லன்ச்'க்கு பேக் செய்வதும் பாதுகாப்பானதல்ல என்கிறார்கள்.


விண்ணைமுட்டும் விலை வாசி நேரத்தில் மீந்துபோன உணவை எப்படி வீணாக்குவது என்கிறீர்களா? சரியான கேள்விதான். அதற்கம் உணவு ஆலோசகர்கள் "டிப்ஸ்' தருகிறார்கள்.


* ஒவ்வொரு நேரத்துக்கம் வேண்டியதை அளவாக சமைப்பது நல்லது.


* காலையில் மீந்துபோன கறியுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து சப்பாத்திக்கு கூட்டு செய்து மாலையில் டிபனாகப் பரிமாறலாம். அல்லது பச்சை வெங்காயம் தக்காளியுடன் "சாண்ட்விச்'சாக கொடுக்கலாம்.


* சப்பாத்தியை சிறிதாக கட்செய்து அதனுடன் மீந்து��ன காய்கள், ரசத்தில் உள்ள பருப்பைச் சேர்த்து கொத்துபரோட்டா வகை உணவாக்கிக் கொடுக்கலாம். காயும் வீணாகாது. பிரெஷ்ஷாகச் சாப்பிடலாம்.


* ரசகுல்லா, குலோப் ஜாமுன் சர்க்கரை சிரப் மீந்து போனால் மில்க் ஷேக், லெமன் ஜூஸுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.




மீந்த உணவை ஃப்ரிஜ்ஜில் வைக்கும் போது கவனிக்கப்பட வேண்டியது என்ன?


* குளிர்நிலையில் உணவை பதப்படுத்தப்பட்ட உபயோகிக்கும் பாத்திரங்கள் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும்.


* ஃப்ரிட்ஜில் ஓவர்டோஸ் செய்யக்கூடாது.


* குளிர்க்காற்று எளிதாக எல்லா பொருட்கள் மீதும் படும்படி இருக்க வேண்டும்.


முன்காலத்தில் காலையில் குளித்த பின் வாசலில் தோட்டத்துக் காயை வாங்கி உடனே நறுக்கி சாணி மெழுகிய அடுப்பில் சமைத்துச் சுடச்சுட சாப்பிட்டவர்களின் உடல் உரமாக உரைத்து நின்ற ரகசியம் இப்போதாவது புரிகிறதா?


- நன்றி: "தி ஹிந்து'


 

குறைவான துவரம் பருப்பில் மணமான சாம்பார் செய்யலாமா?

வாணலியில் ஒரு கப் தனியா, அரை கப் துவரம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து வறுக்கவும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு (தேவையானால்) சேர்த்து மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
புளிநீர் + சாம்பார் பொடி+ உப்பு+ காய்கள் கொதிக்கையில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தேவையானால் தேங்காய் துருவலும் சேர்த்து அரைக்கலாம். சாம்பார் ருசியாக இருக்கும்.
துவரம் பருப்பு, வரமிளகாய், கொள்ளு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். துவரம் பருப்பு விலை அதிகமாக இருக்கும்போது குழம்பில் நான்கு டேபிள் ஸ்பூன் போட்டு கொதிக்கவிடலாம்.

மைக்ரோவேவ் அவனில் ஊறுகாய் மேலே தெறிக்காமல் எப்படி செய்வது?

தக்காளியை மிக்ஸியில் அரைத்து உலோக வடிகட்டியில் வடிகட்டவும். வெங்காயம், பூண்டு, இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மைக்ரோ ப்ரூப் கண்ணாடி பாத்திரத்தில் எண்ணெயில் கடுகை போட்டு ஹை பவரில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். இதில் சிவப்பு மிளகாய்த்துள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, தக்காளி விழுது, வெங்காயம், பூண்டு விழுது, பெருங்காயம், உப்பு சேர்த்து மீடியம் ஹை பவரில் பத்து நிமிடங்கள் வைக்கவும். (இடையில் இரண்டு முறை வெளியே எடுத்து கலந்து விடவும்). தொக்கு, சரியான பதத்தில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, தேவையானால், மேலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மீடியம் பவரில் வைக்கவும், மைக்ரோ அவனில் செய்யும்போது தொக்கு மேலே தெறிக்காது. உங்களது பாட்டியின் பக்குவத்தில் மணமணக்கும் தக்காளி வெங்காயத்தொக்கு தயார்.



Sunday, March 21, 2010

 

சமையல் குறிப்புகள்

*​ வெங்காய பகோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும்.​ இதனால் பகோடா மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

*​ சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

*​ சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால்,​​ பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

*​ தேங்காய்த் துருவல் மீதியானால்,​​ அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*​ ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.

*​

இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

*​ பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

 

மருந்தாகும் வெள்​ளரி!

நா வறட்​சியை தடுக்க மட்​டு​மின்றி பல​வி​த​மான உடல் உபா​தை​களி​லி​ருந்​தும் நம்மை பாது​காக்​கும் அரு​ம​ருந்​தா​க​வும் வெள்​ளரி பயன் தரு​கி​றது.​ குறைந்த விலை​யில் கிடைக்​கும் வெள்​ள​ரி​யைச் சாப்​பிட்​டால் மன​துக்கு உற்​சா​கம் பிறப்​ப​து​டன்,​​ உட​லுக்​கும்,​​ தோலுக்​கும் நன்மை பயக்​கும்.​

100 கிராம் வெள்​ள​ரியை அப்​ப​டியே சாப்​பிட்​டால் நமக்கு,​​ கார்​போ​ஹை​டி​ரேட் -​ 3.63 கிராம் ,​​ சர்க்​கரை -​ 1.67 கிராம் ,​​ நார்ச்​சத்து -​ 0.5 கிராம்,​​ கொழுப்​புச்​சத்து -​ 0.11 கிராம்,​புரோட்​டின் -​ .65 ராம் ,​​ விட்​ட​மின் பி1 -​ 0.027 மில்லி கிராம்,​விட்​ட​மின் பி2 -​ 0.033 மில்லி கிராம்,​​ விட்​ட​மின் பி3 -​ 0.098 மில்லி கிராம் ,​விட்​ட​மின் பி5 -​ 0.259 மில்லி கிராம் ,​விட்​ட​மின் பி6- 0.040 மில்லி கிராம் ,​விட்​ட​மின் ​ இ​ -​ 2.8 மில்லி கிராம் ,​கால்​சி​யம் -​ 16 மில்லி கிராம் ,​இரும்​பு​சத்து -​ 0.28 மில்லி கிராம் ,​மெக்​னீ​சி​யம் -​ 13 மில்லி கிராம் ,​பாஸ்​ப​ரஸ் -​ 24 மில்லி கிராம் ,​பொட்​டா​சி​யம் -​ 147 மில்லி கிராம்,​​ சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத்​துக்​கள் சத்​த​மின்றி வந்து சேரும்..​

வெள்​ள​ரியை தொடர்ந்து சாப்​பிட்டு வந்​தால் பிர​ஷர் சம​நி​லைப்​ப​டும்.​ நெஞ்​சக எரிச்​சல்,​​ வயிற்று எரிச்​சல்,​​ அல்​சர்,​​ வாயுத்​தொல்​லை​க​ளும் குண​ம​டை​யும்.​ மேலும் வெள்​ளரி,​​ கேரட் கலந்த ஜூûஸ குடித்து வந்​தால் வாத சம்​பந்​த​மான நோய்​கள் குண​ம​டை​யும்.​ கண்​க​ளைச் சுற்றி வெள்​ளரி துண்​டு​களை வைப்​ப​தன் மூலம் கண் எரிச்​சல் மாறு​வ​து​டன் வீக்​க​மும் குண​ம​டை​யும்.​ மொத்​தத்​தில் வெயி​லி​னால் ஏற்​ப​டும் அத்​தனை உடல்,​​ தோல் எரிச்​சல்​க​ளை​யும் இது குணப்​ப​டுத்​தும்.​ வெள்​ளரி குடித்து வரு​ப​வர்​க​ளுக்கு நீரி​ழிவு நோயும் மட்​டுப்​ப​டும்.​ பெண்​க​ளுக்கு தலை​முடி வள​ரும்

 

ஆரோக்ய வாழ்வுக்கான 'டிப்ஸ்'

உணவை வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக சாப்பிட வேண்டும். உணவு அளவை குறைக்க வேண்டும். மூன்று வேளை உணவை ஆறு வேளையாக உண்ணலாம். பாஸ்ட் புட், பூரி, எண்ணெய்யில் பொரித்த உணவை தவிர்க்க வேண்டும். ராகி, கேப்பைக்கூழ் போன்றவற்றை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் விரைவில் சர்க்கரை ஏறி இறங்கிவிடுகிறது. உடனே பசியெடுக்கும் என்பதால் அதுவும் நல்லதல்ல.

ஓட்ஸ் போன்றவற்றால் கலோரி அதிகரிக்காது என்பதால் அவற்றை உண்பது நல்லது.

அரிசியில் 72, கோதுமையில் 67 சதவீதம் மாவுச் சத்து உள்ளது. எனவே சாதத்தை குறைத்து காய்கறியை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

Saturday, March 20, 2010

 

அக்கார அடிசில்

தேவையானப் பொருட்கள்

  • பச்சரிசி - அரை கப்
  • பாசி பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
  • கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • நெய் - 3 தேக்கரண்டி
  • பால் - ஒரு கப்
  • பொடித்த வெல்லம் - கால் கப்
  • ஏலக்காய் - 2
  • முந்திரி - 6
வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். அரிசி, பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பை மூன்றையும் தூசி இல்லாமல் சுத்தம் செய்துக் எடுத்துக் கொள்ளவும்.
step 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் உடைத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
step 2
திராட்சை பொரிந்ததும் அதனுடன் ஏலக்காய் பொடியை போட்டு கிளறி விட்டு பிறகு அதில் அரிசி, பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பு மூன்றையும் போட்டு 4 நிமிடம் நன்கு வறுக்கவும்.
step 3
4 நிமிடம் கழித்து அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
step 4
அதன் பின்னர் கால் கப் பால் ஊற்றி பருப்புடன் பால் ஒன்றாகும்படி நன்கு கிளறி விட்டு 20 நிமிடம் நன்கு குழைய வேக விடவும். இடையில் கிளறி கொண்டே இருக்கவும்.
step 5
பிறகு வாணலியில் அல்லது அடி கனமான மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைய விடவும். வெல்லம் கரையும் வரை கிளற கொண்டே இருக்கவும். வெல்லம் கரைந்தால் போதும். அதிக நேரம் அடுப்பில் வைத்து பாகாக காய்ச்ச கூடாது.
step 6
அரிசி மற்றும் பருப்பு நன்கு குழைய வெந்ததும் காய்ச்சிய வெல்லத்தை வடிகட்டியால் வடிகட்டி அதில் ஊற்றவும்.
step 7
வெல்லத்தை ஊற்றிய பிறகு நன்கு 3 நிமிடம் கிளறி விடவும். அதனுடன் மீதம் இருக்கும் முக்கால் கப் பாலை ஊற்றி 5 நிமிடம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
step 8
பிறகு 2 நிமிடம் தீயை மிதமாக வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
step 9
சுவையான அக்கார அடிசில் தயார். இதில் முந்திரி, திராட்சை சேர்க்காமல் சிறிது பச்சை கற்பூரம் சேர்த்தும் செய்வர்.
step 10


 

பரோட்டா

தேவையானப் பொருட்கள்

  • மைதா மாவு - அரைக் கிலோ
  • பால் - ஒரு கப்
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
  • சீனி - 2 தேக்கரண்டி
  • உப்பு - 1 1/2 தேக்கரண்டி
  • நெய் - கால் கப்
  • எண்ணெய் - 100 மி.லி
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொள்ளவும். பாலில் சீனி, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கரைத்து மாவில் ஊற்றி பிசறிய பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். பிசைந்த மாவு கையில் சிறிதும் ஒட்டாமல் மிருதுவாக இருக்க வேண்டும். இதுவே சரியான பதம்.
பிறகு ஒரு ஈரத் துணியை கொண்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை நன்கு மூடி அதற்கு மேல் மூடி போட்டு முக்கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
ஒரு மீடியமான மரவை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவிக் கொள்ளவும். சப்பாத்தி உருட்டும் கட்டையிலும் எண்ணெய் தடவி கொண்டு மாவு உருண்டையை அதில் வைத்து எவ்வளவு மெல்லியதாக தேய்க்க முடியுமோ அவ்வளவு மெல்லியதாக மாவை தேய்த்து வைக்கவும்.
பிறகு விரலால் எண்ணெய் எடுத்து தேய்த்து வைத்திருக்கும் மாவில் தெளித்து விட்டு அதை முன்னும், பின்னும் மாறி மாறி மடிக்கவும் அல்லது ஒன்று சேர்த்து சுருட்டி அதன் மேலே எண்ணெய் தொட்டு வைக்கவும்.
இதேப்போல் எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடுப்படுத்தி முதலில் சுருட்டிய உருண்டையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் ரொம்ப மெல்லியதாகவும், மொத்தமாகவும் இல்லாமல் திட்டமாக தேய்த்து சூடேறிய தவாவில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
லேசாக தூக்கி பார்த்து சிவந்ததும் பரோட்டாவை திருப்பி போட்டு ஒரு தேக்கரண்டி நிறைய எண்ணெயை சுற்றிலும் ஊற்றி எல்லா இடத்திலும் படுமாறு செய்யவும்.
மீண்டும் லேசாக பரோட்டாவை தூக்கி பார்த்து நன்கு சிவந்திருந்தால் மறுபடியும் திருப்பி போட்டு சிவந்ததும் தவாவை விட்டு எடுத்து மரவையில் வைத்து இரண்டு கைகளால் பரோட்டாவை உள்நோக்கி மூன்று முறை அடிக்கவும்.






கையில் சிறிது நெய் தடவி கொண்டு மாவிலிருந்து சப்போட்டா அளவிலான உருண்டை உருட்ட தேவையான மாவை எடுத்து அழுத்தி நான்கு பக்கம் மடித்து பின் உருண்டை உருட்டினால் உருண்டை ஸ்மூத்தாக இருக்கும். அந்த உருண்டையின் மேல் நெய் முழுவதும் தடவி வைக்கவும்.
மீதமிருக்கும் மாவு முழுவதும் இதேப்போல் செய்யவும். (மொத்தம் ஒன்பது உருண்டைகள் வரும்). அதையும் ஈர துணி கொண்டு மூடி அதன் மேல் தட்டு போட்டு மூடி குறைந்தது இரண்டு மணி நேரம் வைத்திருக்கவும்.



 

உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் (Potato fingers)

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 3 (சிறியது)
  • தோசைமாவு - இரண்டு கப்
  • பச்சைமிளகாய் - 1
  • இஞ்சி - சிறிது
  • எண்ணெய் - கால் லிட்டர்

செய்முறை

  • இஞ்சி மற்றும் மிளகாயை சிறிதாக அரிந்துகொள்ளவும். அதனை விழுதுபோல அம்மியில் வைத்து அரைத்துகொள்ளவும்.
  • அரைத்தவற்றை தோசைமாவுடன் கலந்து கொள்ளவும்.
  • உருளைகிழங்கை விரல் போல நீளமாக அரிந்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கை மாவில் முக்கி அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து பேபர் நாப்கினில் போடவும். எண்ணெய் வடிந்தவுடன் அதனை எடுத்து பறிமாரவும்.
  • மொறுமொறு உருளை ரெடி

 

பானி பூரி

தேவையான பொருட்கள்

  • பானிக்கு:-
  • -------------
  • புதினா - 1/2 கட்டு,
  • கொத்தமல்லி தழை - 1/2 கட்டு,
  • பச்சை மிளகாய் - 2,
  • வெல்லத்தூள் - 1 தேக்கரண்டி,
  • எழுமிச்சம் பழச்சாறு - 1 பழ அளவு,
  • பேரிச்சம் பழம் - 4,
  • உப்பு - தேவையான அளவு.
  • உள்ளே நிரப்ப:-
  • ------------------
  • வேக வைத்த உருளைக்கிழங்கு - 2,
  • வேக வைத்த முளைப்பயிறு - 2 கைப்பிடி,
  • சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • உருளைக்கிழங்கை உதிர்த்து, மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
  • பானிக்குக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக அரைத்து தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
  • பானி பூரி செய்யும் முறை:-ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரிகளில் உப்பியவற்றை எடுத்து, நடுவில் துளையிட்டு, உருளைக்கிழங்கு கலவையை உள்ளே நிரப்பி, பானியை உள்ளே ஊற்றி, உடனே சாப்பிட வேண்டும்.

குறிப்பு:

தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளலாம்.


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]